இலங்கையின் கடன் நெருக்கடிக்கு புதிய மறுசீரமைப்பு தேவை – 121 உலக பொருளியலாளர்கள் வலியுறுத்தல்

imf

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், நாட்டின் கடன் நெருக்கடிக்கு நீடித்த தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக 121 உலக பொருளியலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் ஜோசப் ஸ்டிக்ளிட்ஸ் உட்பட இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வெளியகக் கடன் மீள்செலுத்துதலை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில், தற்போதைய ஒப்பந்தத்திற்கு மாற்றாக ஒரு புதிய, நியாயமான மற்றும் நிலையான கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு இலங்கை செல்ல வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

One thought on “இலங்கையின் கடன் நெருக்கடிக்கு புதிய மறுசீரமைப்பு தேவை – 121 உலக பொருளியலாளர்கள் வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *