இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நிபுணர்கள் இந்தியாவில் சிறப்பு பயிற்சி

இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையைச் சேர்ந்த 20 நிபுணர்கள் அடங்கிய குழு, 2025 டிசம்பர் முதலாம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து, சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..

இந்தக் குழுவில், இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இரத்தினம் வெட்டுதல் மற்றும் மேம்படுத்துதல் (cutting & polishing) பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த பயிற்சி நிகழ்ச்சி, 2025 ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதன்படி, இருதரப்பு திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 தனிப்பயன் பயிற்சி வாய்ப்புகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது.

20 நாட்கள் நீடித்த இந்தப் பயிற்சி நிகழ்ச்சி, இந்திய அரசின் ஏற்பாட்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள இந்திய இரத்தினம் மற்றும் ஆபரண நிறுவனம் (Indian Institute of Gem & Jewellery) மூலம் நடத்தப்பட்டது. 

இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியையும் (value chain) உள்ளடக்கிய தொழில்நுட்ப மற்றும் கருப்பொருள் சார்ந்த அம்சங்களைப் பயிற்சித் திட்டம் கொண்டிருந்தது.

2 thoughts on “இலங்கையின் ரத்தினக்கல் மற்றும் ஆபரண நிபுணர்கள் இந்தியாவில் சிறப்பு பயிற்சி

  1. Yo, 898bet1 looks promising! New site, seems legit. Quick deposits and withdrawals are a major plus. I’m putting some money here and see how it goes. My friend recommend it for new players. Sign up through this link: 898bet1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *