ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (13)மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 851 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 288 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 450 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 511 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 685 கஞ்சா செடிகளும், 001 குஷ் போதைப்பொருளும், 004 கிராம் ஹசீஸ்…
சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகள் – அமைச்சரவை அங்கீகாரம்
பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சுகாதாரத் துறையில் புதிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.11.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 18 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோயால் 2021 – 2024 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவான சுகாதார சேவை கருத்திட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தின் அண்மைக்கால வளர்ச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், பொதுமக்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய கருத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

