இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார்.  இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த…

Read More

2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட சொற்கள் 

2025ஆம் ஆண்டில் இலங்கையில் TikTok தளத்தில் அதிகம் தேடப்பட்ட சொற்களை TikTok நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆண்டு இலங்கையர்கள் எவற்றில் அதிக ஆர்வம் காட்டினர் என்பதை இத்தரவுகள் பிரதிபலிக்கின்றன. அவர்கள் பின்தொடரும் பிரபலங்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் (content creators), செவிமடுக்கும் இசை, நாடகத்தொடர்கள், சுற்றுலா செல்ல விரும்பும் இடங்கள் என இந்த ஆண்டு இலங்கையர்களின் கவனத்தை ஈர்த்தவற்றை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன. கிரிக்கெட் ஹைலைட்ஸ் முதல் பொழுதுபோக்கு செய்திகள், கண்டி எசல பெரஹர போன்ற பண்பாட்டு நிகழ்வுகள்…

Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் இரு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் பேரில், நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.பி ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கான பரிந்துரையை வழங்குவதற்காக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ரூ.72,000 பணத்தை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நுவரெலியா மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Read More

அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்ப்பாரென எதிர்பார்க்கின்றோம் – திலித் ஜயவீர

வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்ப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அவருக்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை ‘வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள திலித் ஜயவீர, வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இலங்கையின் சோசலிச ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கு எதிராக அமெரிக்க…

Read More
vijitha-hearth

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் பிரதமருக்கு எதிரான தவறான பிரச்சாரங்கள் – அமைச்சர் விஜித்த ஹேரத் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிரதமரை பதவி விலகுமாறு அரசாங்கத்தில் எவரும் குறிப்பிடவில்லை என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். 6ஆம் தர பாடப்புத்தகத்தில் தவறான விடயமொன்று உள்ளடக்கப்பட்டுள்ளமை பாரதூரமான பிழையாகும். தரவு தொகுதி அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எந்நோக்கத்துக்காக…

Read More
DEATH

உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி!

அநுராதபுரம் – மகாவிலச்சிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  உலுக்குளம் கிராம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இரவு பதிவாகியுள்ளது. உலுக்குளம் பகுதியிலிருந்து பேமடுவ நோக்கிப் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றில் பயணித்த நபர், உழவு இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.  விபத்தில் காயமடைந்த நபர் பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெமதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர். உயிரிழந்தவரின் சடலம்…

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 %

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக்கொண்ட முதன்மைப் பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதம் 2.1 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட ‘தித்வா’ சூறாவளி காரணமாகக் கடந்த டிசம்பரில் மாதத்துக்கு மாத விலைகளில் கணிசமானளவு அதிகரிப்பொன்று ஏற்பட்ட போதிலும், சாதகமான புள்ளிவிபரத் தளத்தாக்கம் இதற்குப் பிரதானமாகத் துணையளித்திருந்தது. உணவுப்பணவீக்கம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பரில் 3 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்ட அதேவேளை, உணவல்லாப்பணவீக்கம் நவம்பரில் பதிவான 1.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 1.8 சதவீதமாக அதிகரித்தது….

Read More

பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை அவர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வருடாந்தம் இராஜதந்திர ரீதியாகவும், அமைப்புக்கள் மட்டத்திலும் மற்றும் தனிநபராகவும் நன்கொடையாக அல்லது அன்பளிப்பாக வழங்கப்படும். அவற்றை வெளிநாட்டு செலாவணி செலவாகாத வகையில் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படல் வேண்டும். அடுத்துவரும் றமழான் நோன்புக் காலம் 2026.02.19 அன்று ஆரம்பித்து 2026.03.21 ஆம் திகதி முடிவடையவுள்ளது….

Read More
Parliament

பாராளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Read More

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் 2025

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், “வாகனப் பரிசோதனை உயிர்களைக் காக்கும்” (Vehicle Testing Can Save Lives) என்ற விசேட விழிப்புணர்வு செயற்திட்டத்தை சிலோன் வாகனச் சங்கம் (AA Ceylon) ஆரம்பித்துள்ளது. சர்வதேச வாகனச் சம்மேளனம் (FIA) மற்றும் ஐக்கிய நாடுகளின் ‘வீதிப் பாதுகாப்புக்கான தசாப்த கால நடவடிக்கை’ (Decade of Action for Road Safety) ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 8 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள்…

Read More