தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

heroine_case_arrest

தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பொதி ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு தபாலில் அனுப்பப்பட்டவைகள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், 

போதைப்பொருளின் மொத்த எடை 6 கிலோ கிராம் 201 கிராம் ஆகும். விசேட சோதனை நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெமட்டகொடையைச் சேர்ந்த 31 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஒருகொடவத்தை சுங்க முனையத்தில் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட  ஒரு தொகுதி மஞ்சள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

2 thoughts on “தபாலில் அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல் ; ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *