பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு !!

கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதலில் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலால் இன்னும் தீவிரம் அடைந்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான துணை பிரதமர் முல்லா அப்துல் கனி பரதர் இது குறித்து பேசும்போது பாகிஸ்தானின் மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது ஆப்கானிஸ்தானில் சுகாதாரத்துறையில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் வர்த்தகம் வரிகளை மூடுவதால் வர்த்தகர்கள் பெரும் நீதி இழப்பு சந்திப்பதாகவும் குற்றம் சட்டியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் பாகிஸ்தானுக்கு பதிலாக மாற்று விநியோக வழிகளை தேடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வர்த்தகர்கள் இனி இந்தியாவில் இருந்து மருந்துகளை பேர அதிக வாய்ப்புள்ளது. பாக்கிஸ்தான் தவிர ஆப்கானிஸ்தான் மருந்து வழங்கும் முக்கிய நாடுகளில் இந்திய ஒன்றாகும்.

இந்த நடவடிக்கை அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே ஆனா வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளின் ஆழத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *