உலகளாவிய வாகனத் துறையானது, மின்சார வாகனங்களை (EV) நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில், விசேட தொழில்நுட்ப அறிவு மற்றும் நம்பகமான aftersales (விற்பனைக்குப் பின்னரான) சேவைகளுக்கான தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பின்னணியில், இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அண்மையில் ‘Mercedes-Benz Flying Doctor Service Clinic 2026’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது….
முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது
நேற்று (20) தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் போதைப்பொருள் கொண்ட மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, பன்னால பிரதேச சபையின் முன்னாள் சமகி ஜன பலவேகய உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் நேற்று (20) மதியம் தொடர்புடைய பல நாள் மீன்பிடிப் படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது