விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (06) 500 மில்லியன் ரூபா மதிப்புள்ள “குஷ்” என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் செனல்’ வழியாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகள் குஷ்  போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் எனவும்  27 வயதுடைய அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி பரிமாற்ற நிலையத்தில் பணிபுரிபவர் என்றும், 25 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் மும்பையில் பணிபுரியும் பாடசாலை ஆசிரியர்கள் எனவும்  தெரியவந்துள்ளது.

One thought on “விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *