அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
அடுத்த இரு நாள்களுக்கு தலதா யாத்திரையை தவிர்க்குமாறு கோரிக்கை

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்திரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.
ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே, நாளை (24) மற்றும் நாளை மறுநாள் (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வந்துவிட்டதால், அடுத்த இரண்டு நாட்களுக்கும் யாத்திரீகர்கள் வந்தால், அவர்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாது என்று பொலிஸர் கூறுகின்றனர்.
எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு ஸ்ரீ தலதா வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு யாத்திரீகர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.