உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
அவசர அவசரமாக கூடவுள்ள உச்சி மாநாடு.

உக்ரைன் குறித்து அமெரிக்கா ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐரோப்பிய தலைவர்கள் அவசர அவசரமாக சந்திப்பொன்றை செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறவுள்ள இந்தமாநாட்டில் பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் உட்பட பல ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுமுகமான ஒரு அணுகுமுறையை உக்ரைனிற்கான சமாதானத்தில் உருவாக்குவதற்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைப்பதே தனது பணி என பிரிட்டிஸ் பிரதமர் கூறியதோடு ஐரோப்பிய தலைவர்களுடன் இந்த மாநாட்டில் தான் ஆராயும் விடயங்கள் குறித்து இந்த மாத இறுதியில் அமெரிக்காவிற்கு செல்லவிருக்கும் வியாயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பியதும் உக்ரைன் ஜனாதிபதி உட்பட ஐரோப்பிய தலைவர்களை பிரிட்டிஸ் பிரதமர் சந்திக்கவுள்ளார்.