பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

ஆபரேஷன் சிந்து மூலமாக ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.நேற்றிரவு 310 பயணிகளை அழைத்துக் கொண்டுசிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது.
நள்ளிரவில் மேலும் 290 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் டெல்லிக்கு வந்துள்ளது. ஈரானில் இருந்து இதுவரை 1,117 பேர் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்களுடன் நேபாளம், இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்தியாவால் மீட்கப்பட்டுள்ளனர். இதன் பொருட்டு நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன