பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவாக சர்வதேச சந்தையில் இலங்கை ரூபா வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தையின் (Bloomberg market) தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில் உயர்வை எட்டும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தேவைகள் அதிகரித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவினால் வர்த்தகச் சுழற்சி விரிவாகி, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டில் அதிகரித்த இறக்குமதி தேவை காரணமாக வணிகப் பற்றாக்குறை விரிவடையும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.