Categories: Local

இலங்கை சிறுவர்களுக்கிடையில் அதிகரித்துவரும் மந்தபோசணை

இலங்கையில் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இது கணிசமான அளவில் மந்தபோசணை அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் காண்பிப்பதாக உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களில் ஒன்றான உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் போசணை மட்டம் தொடர்பில் அவ்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்ந்த போதிலும், கடந்த ஆண்டு இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சியை நோக்கிய பாதையில் பயணித்தது. குறிப்பாக கட்டமைப்பு மற்றும் கொள்கை ரீதியான மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, 2024 இன் முதலாம் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

அவ்வாறு பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், வறுமை, மக்களின் நலிவுற்றதன்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்ற நிலைமைகள் தொடர்ந்தன. நாட்டின் மொத்த சனத்தொகையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 31 சதவீதமாகப் பதிவானது.

உலக வங்கியின் எதிர்வுகூறலின்படி அடுத்துவரும் சில ஆண்டுகளுக்கு நாட்டின் வறுமை மட்டம் 25 சதவீதத்துக்கும் மேல் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்.

இந்நிலையில் எமது 4 வகையான செயற்திட்டங்கள் ஊடாக நாம் 1.5 மில்லியன் பேருக்கு அவசியமான உதவிகளை வழங்கியிருந்ததுடன், அவர்களில் 61 சதவீதமானோர் பெண்களாவர். அதன்படி உடனடி உணவு விநியோகத்திட்டத்தின் ஊடாக 3900 மெட்ரிக் தொன் உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. அத்தோடு 260,000 டொலருக்கு மேற்பட்ட நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இருப்பினும் இலங்கையின் போசணை மட்டமானது அதிகரித்துவருவதையும், போதியளவு போசணையைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் இடைவெளியையும் கணக்குடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய பாடசாலைகளுக்கான உணவு வழங்கல் திட்டம் மற்றும் திரிபோஷா வழங்கல் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அவசியமான எமது ஒத்துழைப்பைத் தொடர்ந்தும் வழங்குவதன் ஊடாக இந்நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு நாம் முனைகின்றோம் என அறியத்தருகின்றார்கள்.

7 News Pulse

Recent Posts

பேபிசெரமி அறிமுகப்படுத்தும் இலங்கையின் முதலாவது Generative AI ‘Baby Cheramy Diaper Helpdesk’ 24/7 நம்பிக்கைக்குரிய குழந்தை வளர்ப்பு பங்காளி

இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI…

1 day ago

Autodesk Strengthens Commitment to Driving Innovation and Sustainability in Sri Lanka’s Construction Sector

Autodesk, together with its Value-Added Distributor Redington, recently hosted the Autodesk AEC Digital Construction Showcase…

1 day ago

Parental Intelligence (PI): பெற்றோருக்கான இலங்கையின் முதலாவது செயற்கை நுண்ணறிவு உதவியாளர்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Parental Intelligence (PI) (பேரண்டல் இன்டெலிஜென்ஸ்) AI உதவித் தளமானது, இலங்கையின் கலாசாரத்துடன் தொடர்புடைய முதலாவது செயற்கை…

3 days ago

Nyne Hotels Immerses Travel Agents in Boutique Luxury Experience

Nyne Hotels, Sri Lanka’s exclusive collection of luxury boutique properties, recently hosted an experiential showcase…

3 days ago

Sri Lanka welcomes ‘Hello, to More’ as GWM and David Pieris Automobiles announce strategic partnership

Appoints DPA as an authorised distributor for GWM in Sri Lanka Launches hybrid and new…

3 days ago