நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(வெப்ரவரி 16) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது நீண்டகாலமாக கட்சியின் பொதுச்செயலாளரக கடமையாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததை அடுத்து கட்சியின் துணைச்செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் இத்தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்படவில்லை என்பதனையும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்றவகையில் எம்.ஏ.சுமந்திரனே தெரிவித்தார்.

