இலஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

50,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற மதிப்பீட்டு பெண் அதிகாரி ஒருவரை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

குருநாகல், பௌத்தாலோக மாவத்தையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சந்தேக நபரைக் கைது செய்துள்ளது.

முறைப்பாட்டாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிலம் தொடர்பான பத்திரத்திற்காக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முத்திரை வரியை குறைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஈடாக அவர் இந்த இலஞ்சத்தை கோரியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் வடமேற்கு மாகாண சபையின் மாகாண வருவாய் திணைக்களத்தில் பணிபுரிந்த மதிப்பீட்டு அதிகாரி என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *