இலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட சுகாதாரப்பரிசோதகருக்கு சிறை.

ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க இலஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொது சுகாதார ஆய்வாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலேவெல சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட பொது சுகாதார ஆய்வாளர், நேற்று (வெப்ரவரி 14) ரூ. 200,000 இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *