அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்கள் நடைபெறும் தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பு மத சேவைகள் நடைபெறும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.