உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை நேற்று (மார்ச் 17) முதல் ஆரம்பமாகிவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்குக் கடந்த 3 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை வேட்பாளர்கள் கட்சி சார்பாக ஆர்வத்தோடு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *