அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீப்பரவலுக்கான காரணம் வெளியானது

நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவலினால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று மீண்டும் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மீனவ சமூகம் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளன.
கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே மன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
இதற்கு அந்த கப்பலின் கப்டன் உள்ளிட்ட பணிக்குழாமினர் மற்றும் அதன் உரிமத்தைக் கொண்ட நிறுவனம் ஆகிய தரப்பினரே பொறுப்பு கூற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் தனிப்பட்ட தரப்பினரிடம் நட்டயீடு கோர அடிப்படை உரிமை மனுவில் வாய்ப்பில்லை எனவும் இதற்கான நட்டயீட்டை வழங்குமாறு அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நிதி கிடைத்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.