அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
கச்சத்தீவை மீட்கவேண்டும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை விடுதலை செய்து மீட்டு வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதேநேரம் பாக் வளைகுடா பகுதியில் வாழும் இந்திய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 02) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த தீர்மானம், எதிர்கட்சியினரின் மறுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, 1974 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தமே, மீனவர் கைது மற்றும் சில பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு உறுதியுடன் எதிர்க்கிறது என்பதையும் தமிழக முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.