இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC, நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முனைவோரின் நிதி அறிவுத்திறனை மேம்படுத்துவதறற்காக “திரியென் தியுனுவட்ட” நிதி அறிவுத்திறன் திட்டத்தின் அடுத்த கட்டத்தை அண்மையில் புத்தளம் நகரத்தில் நடைபெற்றது. HNB Finance நிறுவனத்தின் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையானன பயிற்சி நிகழ்ச்சிகள் மூலம், HNB Finance நிறுவனம் ஏராளமான…
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் முதன்மை நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.