நாளைய (01) சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட அனைத்து தரப்பினரும் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்கமைய தேசிய மக்கள் சக்தி தனது மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி அணிதிரளும் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினக் கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐக்கிய மக்கள்…
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இன்று(வெப்ரவரி 19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி மொஹமட் அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் அடையாளம் காணப்பட்டு புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணிக்கும்போது விசேட அதிரடிப்படையினரால்(STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அறியப்படுகின்றது.