நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கத்தியால் தாக்கப்பட்டு வயோதிபர் படுகாயம்!
களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இயைடில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த வயோதிபரும் அவரது மருமகனும் உணவக உரிமையாளரான முச்சக்கரவண்டி சாரதியிடம் முச்சக்கரவண்டியை சற்று நகரத்தி வழிவிடுமாறு கூறியுள்ளனர்.

