கயந்த கருணாதிலக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலை!

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை (11) காலை முன்னிலையாகியுள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் போது விவசாய அமைச்சை செயற்படுத்துவதற்காக, இராஜகிரிய பகுதியில் கட்டிடமொன்றை வாடகைக்கு வாங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு கயந்த கருணாதிலக்க அவ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராகவும், முன்னாள் ஊடக அமைச்சராகவும் கயந்த கருணாதிலக்க பணியாற்றியிருந்தார்.

இன்று காலை 9 மணியளவில் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, சுமார் 2 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவுசெய்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “கயந்த கருணாதிலக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலை!

  1. Just tried out gam88bet, and I’m liking what I see. They offer a wide variety of sports betting options, and the live betting feature is pretty cool. Got a few wins already! Definitely recommend giving it a shot. Place your bets on gam88bet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *