களனி பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான என்.டி.ஜி. கயந்த குணேந்திரா வே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

நேற்றிரவு (மார்ச் 18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *