காலி மாநகர சபையில் குழப்பநிலையை ஏற்படுத்திய மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது!

காலி மாநகர சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக கூறப்படும் காலி மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

காலி மாநகர சபையின் மேயர் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த விசேட கூட்டத்தில் காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயர் மீது தண்ணீர் போத்தல்களை வீசி அவர் மீது தண்ணீரை தெளித்து “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். 

குழப்பநிலை காரணமாக காலி மாநகர சபையின் மேயர் கூட்டத்தை இடைநிறுத்தி அங்கிருந்து வெளியே சென்றுள்ளார்.

3 thoughts on “காலி மாநகர சபையில் குழப்பநிலையை ஏற்படுத்திய மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஐவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *