அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் கஞ்சிபாணி இம்ரான்

போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த, வனத்துறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட எட்டு பேர், சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘கோகைன்’ போதைப்பொரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையை சேர்ந்தவர் கஞ்சிபாணி இம்ரான்; சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில், நிழல் உலக தாதா போல செயல்பட்டு வருபவர். கடந்த 2019ல், துபாயில் பதுங்கி இருந்த இவர், இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டு சிறையில் இருந்து, 2023ல், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவானார்.
தற்போது அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் போதைப் பொருளை, கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவது தெரியவந்துள்ளது.
அதற்காக, கடத்தலுக்கான நுழைவு வாயிலாக தமிழகத்தை பயன்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில், தன் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
அவரது பிடியில் கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.” என்றனர்.