அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அஸ்வெசும நிச்சயம் – ஜனாதிபதி

குறைந்த வருமானத்தினைக் கொண்ட மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் சந்திப்பொன்றின் போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் “நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழும் மக்கள் உள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும தொகையில் நாங்கள் மாற்றங்களைச் செய்துள்ளோம்”
8500 ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாவைப் பெறுவார்கள். 15ஆயிரம் ரூபா அஸ்வெசும தொகையைப் பெற்றவர்கள் 17500 ரூபாவை அஸ்வெசும நிவாரணமாகப் பெறுவார்கள்.
மேலும், அஸ்வெசும தொகை கிடைக்கப்பெறாத 4 இலட்சம் குடும்பங்கள் இன்னும் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும நிவாரணத் தொகை வழங்கப்படும்.
அத்துடன், முதியோருக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், அஸ்வெசும நிவாரணத் தொகை உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்தியுள்ளோம்” என தெரிவித்தார்.