இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
சரணடைந்த தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்..!

தலைமறைவாக இருந்ததாக கருதப்பட்டு வந்த தேசபந்து தென்னகோன் இன்று (மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நாளை (மார்ச் 20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த அவர், இன்று(மார்ச் 19) காலை தனது வழக்கறிஞர்களுடன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சம்பவம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைக் கோரி, தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் முடிவு செய்தது.
அதற்கமைய, தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையிலேயே அவர் இன்று(மார்ச் 19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் சரணடை