நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்
சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது
உலக மீன் சந்தையில் 8% பங்கு வகிக்கும் இந்தியா, கடந்த ஆண்டு மீன் ஏற்றுமதியில் 7000 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சர்வதேச மீன் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலின்படி, கடந்த ஆண்டு, சீனா 67.80 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தியா 18.40 மில்லியன் டன் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

