அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
சீனாவை ஆட்டிப்படைக்கும் சூறாவளி

சீனாவின் தெற்குக் கரையை வூடிப்ச் சூறாவளி ஆட்டிப்படைத்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 16,000 பேர் கட்டுமானத் தளங்களிலிருந்தும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது.
பல விமான, ரயில் சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. நேற்று இரவிலிருந்து அந்த வட்டாரத்தில் கடும் காற்று வீசுகிறது. கனமழை பொழிகிறது.
கப்பல்களில் வேலை செய்யும் சுமார் 40ஆயிரம் பேர் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனாவைத் தாக்கியுள்ள முதல் சூறாவளி இதுவாகும்.