இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை பதிவான மிக உயர்ந்த மதிப்பை எட்டியுள்ள நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,100 டொலர்களை தாண்டியுள்ளது.
நேற்று (31) 24 கெரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் விலை 3,128.06 டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், இன்று (ஏப்ரல் 01) அது மேலும் உயர்ந்து 3,137 டொலர்களாக பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை இவ்வாறு உயர்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த மற்றும் விதிக்க தயாராகும் சுங்க வரிகள் ஒரு கூடுதல் தூண்டுதலாக அமைந்தாலும், இதற்கு வேறு சில காரணங்களும் பங்களித்துள்ளன.
உலகம் முழுவதிலுமுள்ள மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்குவதால் ஏற்பட்டுள்ள தேவை ஒரு முக்கிய காரணமாகும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி வீதங்களை மேலும் குறைப்பதற்கான போக்கு மற்றொரு காரணமாக உள்ளது.
வட்டி வீதங்கள் குறைவதால் முதலீடுகளின் திருப்பி செலுத்தும் திறன் அல்லது இலாபம் குறையும் என்பது உங்களுக்கு தெரியும்.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் புவி அரசியல் பதற்றங்களும் இதற்கு பங்களித்துள்ளன. இதனால் காசா போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோதல்கள், ரஷ்ய-உக்ரைன் போர் போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
தங்கத்தின் விலை இவ்வாறு எல்லையற்று உயர்வதற்கு மற்றொரு காரணம், தங்கத்துடன் தொடர்புடைய பரிமாற்ற நிதியங்களுக்கு (Exchange Traded Funds) பெருமளவு முதலீடுகள் பாய்ந்து வருவதாகும். “கோல்டு பேக்டு எக்ஸ்சேஞ்சு ட்ரேடடு பண்ட்ஸ்” (Gold-backed ETFs) இன்று உலகில் ஒரு புதிய முதலீட்டு போக்காக உள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2025 ஜனவரி காலாண்டில், 1986க்கு பிறகு மிக உயர்ந்த காலாண்டு வளர்ச்சியை பதிவு செய்கிறது.
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 20 முறை வரலாற்று உச்சத்தை தாண்டியது ஒரு சிறப்பம்சமாகும். இதில் எட்டு முறை ஒரு அவுன்ஸ் விலை 3,000 டொலர்களை கடந்துள்ளது.
2025 ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை சுமார் 18% உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலக சந்தையில் தங்கத்தின் விலை 27% உயர்ந்திருந்தது.
ஜெர்மன் தங்க சந்தை நிபுணர் ஒருவர் கூறுகையில், புவி அரசியல் பதற்றங்கள், பணவீக்கம் உயரும் போக்கு மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் அதிக தேவை ஆகியவற்றால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த, நிலையான மட்டத்தில் இருக்கும் என்று தெரிவித்தார்.
வர்த்தகப் போரின் நடுவே அமெரிக்க டொலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்குவதாக நம்பப்படுகிறது.
ஆனால், இது டொலரின் மீதான நம்பிக்கை குறைவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருதவில்லை.
எவ்வாறாயினும், மத்திய வங்கிகள் போன்ற அதிகாரபூர்வ துறைகளின் பெரிய அளவிலான வாங்குதல்களுடன், 2025 ஆண்டு இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,300 டொலர்களை எட்ட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.