இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும்…

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 19) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“தந்தை செல்வா, ஜி. ஜி பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி இது. நீண்டகால அரசியலில் இருக்கும் நான் தூய்மையான அரசியலை முன்னெடுத்த இருக்கின்றேன். நாங்கள் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை. நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும்.
இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கிலே பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
என்னுடனும் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள். என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை.
ஆனால் அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஒரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும்” என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.