நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம்…
தாய்லாந்துக்கு விதிக்கப்பட்ட புதிய பரஸ்பர வரி – அமெரிக்க விரையும் தாய்லாந்து துணை பிரதமர்.

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய பரஸ்பர நிலைப்பாட்டையும், அதற்கேற்ற அதிகரித்த விகிதத்தினையும் சர்வதேசத்திற்கு அறிவித்திருந்தார்.
அதில் தாய்லாந்தின் ஏற்றுமதியில் 36வீத புதிய பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின், வர்த்தகக் கொள்கை தொடர்பான தாய்லாந்தின் நிலைப்பாடு குறித்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
மின்னியல், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற முக்கியத் துறைகளில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்
இந்த விளைவுகளைத் தணிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Pichai Chunhavajira அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்று, அரச மற்றும் வணிகப் பங்குதாரர்களைச் சந்தித்து, ஒரு ஏற்றுமதியாளராக மட்டுமல்லாமல், நம்பகமான நீண்டகால பொருளாதார பங்காளியாகவும் உள்ள தாய்லாந்தின் பங்கை, அமெரிக்கா பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது