இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது
தினக்குரல் பத்திரிக்கையின் ஸ்தாபகர் காலமானார்.

‘தினக்குரல்’ பத்திரிகையின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான எஸ்.பி. சாமி வயது மூப்பு காரணமாக தனது 89 ஆவது வயதில் நேற்று காலமானார்.
வயது மூப்பின் காரணமாக எஸ்.பி. சாமி நேற்று (வெப்ரவரி 19) இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.