அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
தியலும நீர்வீழ்ச்சியில் யாரும் எதிர்பாராத சம்பவம்.

ஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியதை அங்கிருந்தவர்கள் பதட்டப்பட்டதை அவதானித்து தெரிந்துகொண்ட மலேசிய Farah Putri Mulyani என்ற பெண் சுற்றுலாப் பயணி விரைந்து அவரை காப்பாற்றினார்.
இந்த நிகழ்வு எதேர்ச்சையாக சுற்றுலாப்பயணி பயன்படுத்திய கேமராவில் காணொளியாக பதிவாகி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆபத்தை உணர்ந்து தன் உயிரை பணயம் வைத்து இளைஞனை கைப்பற்றிய சுற்றுலாப்பயணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
வெயில் களங்களில் நீர்நிலைகளில் நீராடப்போவபர்கள் அவதானமாக இருக்கவேண்டும், முன்னர் அறியாத இடங்களில் நீராடச்செல்லும் பொது அவ்விடத்தைப்பற்றி அறிந்த வழிகாட்டிகளோடு செல்வது சிறப்பு.