நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது. ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம்…
திலிண களுதொடகேவினால்வேகத்தில், தூரத்திலும் வித்தியாசப்பட்ட இரண்டு அம்சங்கள் ஒரு புகைப்படத்தில் – இலங்கை புகைப்பட கலைஞரின் கைவண்ணம்.

இலங்கை புகைப்பட கலைஞர் திலிண களுதொடகேவினால் பெப்ரவரி 4ம் திகதி கொழும்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டபின் தற்போது அந்த புகைப்படம் பேசுபொருளாகியுள்ளது.
பூமியில் இருந்து சந்திரனுக்கு 3,97,000 கிலோமீற்றர் தூரம் இடைவெளி, அதேநேரம் Airbus A330 விமானமொன்று பூமியில் இருந்து 38 ஆயிரம் அடி உயரத்தில், மணித்தியாலத்துக்கு 915 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும். இவ்விரண்டையும்
ஒரே கமெராவுக்குள் மிக லாவகமாக அடக்கி அட்டகாசம் படம்பிடித்துள்ளார்.
இவரது இன்ஸ்டா பக்கத்தில் பிரம்மிக்கத்தக்க பல தருணங்களை பதிவிட்டுள்ளார். அவரது கலை உணர்வுக்கு வாழ்த்துகள்.
அவரது இன்ஸ்டா பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.