அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
நல்லூரான் தெற்கு வாசல் வளைவு

எம்பெருமான் முருகப்பெருமானுக்கே உரித்தான தைப்பூச(11.02.2025) நன்னாளில் தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய அமைப்பின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் தெற்கு கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்பு கண்டது.
இந்த தெற்கு வாசல் வளைவு அமைப்பானது யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக அமையப்பெற்றுள்ளது.
புகைப்படம் – https://www.facebook.com/ingaran.sivashanthan?mibextid=ZbWKwL








