உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
நல்லூரான் தெற்கு வாசல் வளைவு

எம்பெருமான் முருகப்பெருமானுக்கே உரித்தான தைப்பூச(11.02.2025) நன்னாளில் தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலய அமைப்பின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் தெற்கு கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான “நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” காண்பிய விரிப்பு கண்டது.
இந்த தெற்கு வாசல் வளைவு அமைப்பானது யாழ்ப்பாணத்து கந்தபுராண கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாக அமையப்பெற்றுள்ளது.
புகைப்படம் – https://www.facebook.com/ingaran.sivashanthan?mibextid=ZbWKwL








