நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் இஸ்மாயில் முத்து முகமது!
நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முகமது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கட்சியின் முடிவின்படியும், கட்சித் தலைமைக்கு துரோகம் இழைக்காமல் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்மாயில் முத்து முகமது, தேசியப் பட்டியல் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

