இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
நாடு திரும்பினார் ஜனாதிபதி.

ஜனாதிபதி கடந்த 10ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டார். இந்த வியத்தின் போது பல்வேறுபட்ட முதலீட்டாளர்களோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் (Dubai) நடைபெற்ற 2025 உலக உச்சி மாநாட்டிலும் (World Government Summit) கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும் புல்மன் நகர மையத்தில் நடைபெறும் சமூக வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த உத்தியோகபூர்வ பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணமாகியிருந்தார்.