டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிய அழையுங்கள்.

பண்டிகை காலத்தில் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0712 595 555 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும்.
மேலும், பஸ் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும், ரயில் சேவைகள் தொடர்பில் தகவல் அறிந்துகொள்ளுவதற்கு 1971 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.