பதுளை – செங்கலடி வீதியின் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பதுளை – செங்கலடி வீதியின் மரபாலம் பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹாஓயாவிலிருந்து செங்கலடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்துவந்த டிராக்டருடன் மோதியதில், நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் டிராக்டரின் சாரதி காயமடைந்து கரடியனாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். 

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி; உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கரடியனாறு, ராஜபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார்;  மேற்கொண்டு வருகின்றனர்.

One thought on “பதுளை – செங்கலடி வீதியின் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *