நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பஹ்ரைன் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பஹ்ரைன் செல்பவர்கள் சுற்றுலா விசா மூலம் பஹ்ரைனுக்குள் பிரவேசித்து அனுசரணை இன்றி அதனை பணியாளர் விசாவாக மாற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள் காட்டி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அங்கு சுற்றுலா விசாவை அனுசரணையுடன் பணி விசாவாக மாற்றுவதை அனுமதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், தொழில் வாய்ப்புக்காகச் சுற்றுலா விசா ஊடாக பஹ்ரைனுக்குள் பிரவேசிப்பதனை தடை செய்வதற்கு அந்த நாட்டு உள்விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

