நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டின் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் இம்முறை 333,183 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்ததாகவும். அவர்களில் 253,390 மாணவர்கள் பாடசாலை ஊடாகவும், 79,793 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தொற்றியதாகவும் குறிப்பிட்டார்.
இப்பரீட்சைகள் கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரை நாடு முழுவதும் 2312 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றிருந்தன

