நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“பெருசு” – பெருசா சாதிச்சிடும்
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும் குழுந” என்ற பெயரில் இலங்கையின் பிரபல கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடைபோட்டு சர்வதேச விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

