வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…
பேக்கரி ஊழியரின் மர்ம மரணம்! ஆரம்பமாகும் விசாரணை

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் பேக்கரி ஊழியர் ஒருவர் அங்குகுள்ள படிக்கட்டு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மத்துகம, அகலவத்த பகுதியைச் சேர்ந்த 42 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேக்கரியின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய களுத்துறை குற்ற விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்