அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 16 இலட்சம் ரூபா கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை வாழைத்தோட்ட பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.