அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
போதைப்பொருள் பாவனை உறுதியானால் பணி நீக்கம்.

பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சேவையை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகளின், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சேவையை விட்டு வெளியேறிய அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய பொலிஸ் வைத்தியசாலையில் பொருத்தமான பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறிக்கையின்மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.