அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
மகளீர் விவகார அமைச்சரின் செயல் மக்களால் வெகுவாக பாராட்டைப்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் வெப்ரவரி 11 தொடக்கம் 16வரை நடைபெற்ற CEDAW உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்காக பணத்தொகையின் மிகுதியை அரசாங்கத்திற்கு 240 அமெரிக்க டாலர்களாக திருப்பி கொடுத்திருக்கின்றார். அதற்கான பற்றுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, அவருக்கான பாராட்டுகளும் குவிகின்றன.