டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
மகளீர் விவகார அமைச்சரின் செயல் மக்களால் வெகுவாக பாராட்டைப்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் வெப்ரவரி 11 தொடக்கம் 16வரை நடைபெற்ற CEDAW உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய மகளிர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ் ஒதுக்கப்பட்ட செலவுகளுக்காக பணத்தொகையின் மிகுதியை அரசாங்கத்திற்கு 240 அமெரிக்க டாலர்களாக திருப்பி கொடுத்திருக்கின்றார். அதற்கான பற்றுச்சீட்டும் பெறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, அவருக்கான பாராட்டுகளும் குவிகின்றன.