நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
மாணவர்களுக்கு 2028-ல் அறிமுகமாகவுள்ள புதிய பரீட்சை.

மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதமான பரீட்சை ஒன்றை 2028ம் ஆண்டு நடத்த உள்ளதாக
நாடளுமன்றத்தின் இன்றைய(மார்ச் 10) அமர்வின் போது பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான ஹரிணி அமரசூரிய மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கும் விதத்திலான பரீட்சை ஒன்றை 2028ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன் இதன்போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலும் தெளிவூட்டினார்,
புலமைப்பரிசில் பரீட்சை மூலம் ஏற்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் எனவும் பாடசாலைகளுக்கு இடையில் ஏற்படும் தர வேறுபாடு காரணமாகவுமே புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பாடசாலைகளுக்கிடையிலான தர முரண்பாடுகளை களைய முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.